சுனாமி: உப்பு நீரானது நிலத்தடி நீர்
சென்னை:
சுனாமி பாதித்த மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் சீர்கெட்டுள்ளது.
![]() |
கடலூர் மாவட்டம் கீச்சாங்குப்பம் கிராமத்தில் (இங்கு சுனாமி பாதிப்பு மிகக் கடுமையாக இருந்தது) எல்லா கிணறுகளின் நீரும் உப்புநீராகிவிட்டது.
இதையடுத்து இங்கு முகாமிட்டுள்ள ராணுவத்தினர், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உப்புத் தன்மையைப் போக்கி அதை குடிநீராகமாற்றி கிராமத்தினருக்கு லாரிகளில் கொண்டு வந்து கொடுத்து வருகின்றனர்.
ஆனால், நிவாரணப் பணிகள் முடிந்து ராணுவத்தினர் இப் பகுதியைவிட்டுப் போய்விட்டால் குடிக்க தண்ணீருக்கு என்ன செய்வோம் என்றகவலையை தெரிவிக்கின்றனர் இப் பகுதியினர்.
இதேபோல சென்னை நகரின் கடலோரப் பகுதிகளான கொட்டிவாக்கம், பெசன்ட் நகர், சாந்தோம் ஆகிய பகுதிகளிலும் நிலத்தடி நீர் உப்புகரிக்க ஆரம்பித்துள்ளது.
நிலத்தடி நீரில் கடல் நீர் ஊடுறுவியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதேபோல, நாகை மாவட்டத்தில் ஏராளமான விவசாய நிலங்களும் கடல் நீர் புகுந்ததால் நாசமடைந்துள்ளன.













Click it and Unblock the Notifications