மேலும் 50,000 குடும்பங்களுக்கு ரூ.25 கோடி நிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசு ரூ. 47.12 கோடி ஒதுக்கியது. இந்தத் தொகை சம்பந்தப்பட்ட மாவட்டஆட்சியர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது.
இந் நிலையில் சுனாமி அலையினால் மேலும் 50,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த குடும்பங்களுக்கு நிவாரணம்அளிக்க தமிழக அரசு ரூ. 24.56 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம்வழங்கப்படும்.
தற்போது வீடிழந்த குடும்பங்களுக்கு பொங்கலுக்குள் தற்காலிக வீடுகள் கட்டித் தரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.













Click it and Unblock the Notifications