இந்தியப் பெருங்கடலில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
பாண்டா ஏசக்:
![]() |
பூகம்பம், அதைத் தொடர்ந்த சுனாமியால் மிக மோசமான விளைவுகளைச் சந்தித்து சுமார் 50,000க்கும் அதிகமானவர்கள் பலியானபாண்டா ஏசக் பகுதிக்கு அருகே 60 கி.மீ. தொலைவில் இந்தியப் பெருங்கடலில் 14 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
காலை 5.13 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவுக்குப் பதிவான இந்த பூகம்பத்தால் பாண்டா ஏசக் பகுதியில் கட்டடங்கள்பலமாக ஆடின. இதையடுத்து மக்கள் அலறிக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்திய நேரப்படி அதிகாலை 3.43 மணிக்கு இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இதே போன்ற ஒரு கடலடி நில நடுக்கத்தால் தான் கடந்த இரு வாரங்களுக்கு முன் சுனாமி அலைகள் உருவாயின. அப்போது ரிக்டர்ஸ்கேலில் 9 என்ற அளவுக்கு நில நடுக்கம் இருந்தது.













Click it and Unblock the Notifications