For Quick Alerts
For Daily Alerts
Just In
ரவிசுப்பிரமணியம் காவல் நீட்டிப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் காண்டிராக்டர் ரவிசுப்பிரமணியத்தின் சிறைக் காவல் வருகிற 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ரவிசுப்பிரமணியத்தின் சிறைக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து இன்று காலை அவர் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது சிறைக் காவலை வருகிற 24ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் ரவிசுப்பிரமணியம் மற்றும் அப்பு ஆகியோர் இன்று பிற்பகல்சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
விஸ்வநாத அய்யர் ஜாமீன் மனு:
இதற்கிடையே காஞ்சி மட கணக்காளர் விஸ்வநாத அய்யர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி உத்தமராஜ்நாளைக்கு ஒத்தி வைத்தார்.
Comments
chennai tamil nadu news summon kanchi sankarachariyar vijayendrar tn seshan kanchi mutt ravi subramaniam
Story first published: Monday, January 10, 2005, 5:30 [IST]