சேவை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

The scene in Nagai
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு இடையே தொடர்பைஏற்படுத்த சேவை நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக் குழு சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சுவாமி தயானந்த சரஸ்வதி, சத்குருஜக்கி வாசுதேவா, சுவாமி கெளதமானந்தா ஆகியோர்தலைமையில் நடந்தது. இந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கு சுனாமி நிவாரண குழு என்று பெயரிடப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்பு குழுவில் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன், எய்ம் பார்சேவா, ஆர்ட் ஆப் லிவ்விங் பவுண்டேஷன், இஸ்கான், இஷாபவுண்டேஷன், மாதா அமிர்தானந்தமயி மடம், சின்மயா மிஷன், சுவாமி நாராயண் சம்ப்ராதயா, சேவா பாரதி, விவேகானந்தா கேந்திரம்ஆகியவை உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன.

நிவாரண பொருள்கள் முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்துவது இந்த குழுவின் முக்கிய பணியாகஇருக்கும். நிவாரண பணிகள் விரைந்து நடப்பதற்கான முயற்சிகளையும் இக்குழு மேற்கொள்ளும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது, பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களையும் சேவை நிறுவனங்கள் தத்து எடுக்கும்வழிமுறைகளைப் பரிசீலிப்பது ஆகியவையும் மேற்கொள்ளும்.

சுனாமியில் பலியானவர்களுக்காக அனைத்து கோயில்களிலும் இன்று மோட்ச தீபம் ஏற்றும்படி ஒருங்கிணைப்பு குழு வேண்டுகோள்விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+