சுனாமி: பிரதமர் முன் வைகோ- பொன்னையன் மோதல்
டெல்லி:
![]() |
சுனாமி குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, சோனியாகாந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் பொன்னையன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பொன்னையனுக்கும், வைகோவுக்கும் இடையே கடும் வாக்குவாதம்ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வைகோ பேசுகையில், சுனாமி தாக்குதல் நடந்த சில நாட்கள் தமிழக அரசுபக்கவாதம் வந்ததுபோல செயலற்றுப் போயிருந்தது. நிவாரணப் பணிகள் நடைபெறாமல் ஸ்தம்பித்துப் போய்க் காணப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் சிக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டவர்களை தமிழக அரசு காப்பாற்றியதாகக் கூறப்படுதுதவறு. உண்மையில் மீனவர்கள்தான் காப்பாற்றினர் என்றார்.
இதைத் தொடர்ந்து பொன்னையன் குறுக்கிட்டு, இது அபாண்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டு.சுனாமி வருவதை முன்கூட்டியே அறியும் தொழில்நுட்பம் இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது.
ஆனால் சுனாமி பாதிப்பு குறித்து தமிழக அரசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவில்லை என்று வைகோ அபத்தமான குற்றச்சாட்டைக்கூறியிருக்கிறார். இவரை தொடர்ந்து பேச பிரதமர் அனுமதிக்கக் கூடாது என்றார் காட்டமாக.
ஆனால் வைகோ தொடர்ந்து பேசுகையில், அரசியல் நோக்கத்துடன் நான் பேசவில்லை. பேரழிவு நடந்த நேரத்தில் நடந்த உண்மைகளைமத்திய அரசுக்கும் தெரிவிக்க வேண்டியது எனது கடமை என்று பேசினார். அவரை தொடர்ந்து பேசுமாறு திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலுஊக்குவித்தார்.
பொன்னையனும், வைகோவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் சலலசலப்பு ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications