ஆடிட்டர் வழக்கு: அப்பு, ரவியின் காவல் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Appuஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் அப்பு, ரவிசுப்பிரமணியம் ஆகியோரது நீதிமன்றக் காவலை வரும் 20ம் தேதிவரை நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சங்கரராமன் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ரவிசுப்பிரமணியத்தின் சிறைக் காவலை வருகிற 24ம் தேதி வரைநீட்டித்து காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜ் நேற்று உத்தரவிட்டார்.

அதேபோல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் அப்பு மற்றும் ரவி சுப்பிரமணியத்தின் காவல் முடிவடைந்தது.இதனையடுத்து அப்பு கடலூர் சிறையிலிருந்தும், ரவிசுப்பிரமணியம் பூந்தமல்லி சிறைச்சாலையிலிருந்தும் சைதாப்பேட்டை23வது நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இருவரது காவலையும் வரும் 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

விஸ்வநாத அய்யர் ஜாமீன் மனு:

இதற்கிடையே காஞ்சி மட கணக்காளர் விஸ்வநாத அய்யர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காஞ்சிபுரம்முதலாவது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி உத்தமராஜ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+