பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை:
![]() |
இதுதொடர்பாக பல்கலைக்கழக தேர்வுத்துறை இயக்குநர் என்.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுனாமியால் கடலோர தமிழகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள்தேர்வுகளை எழுத முடியாத மன நிலையில் உள்ளனர். எனவே இந்த மாதம் நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 22ம் தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 23ம்தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் பிப்ரவ 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதேபோல ஜனவ 29, 30 மற்றும் பிப்ரவரி 5ம் தேதி தொடங்குவதாக இருந்த தேர்வுகள் பிப்ரவரி 12, 13 மற்றும் 19ம் தேதிக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறும் மையங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், தேர்வுக் கட்டணத்தைசெலுத்தும் கடைசித் தேதியும் ஜனவரி 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் சேதுராமன்.













Click it and Unblock the Notifications