For Quick Alerts
For Daily Alerts
Just In
மீனவர்களுடன் கடலுக்குள் சென்ற அமைச்சர்
சென்னை:
சுனாமி தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக சென்னையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்களுடன் சட்ட அமைச்சர் ஜெயக்குமாரும் சிறிது தூரம் கடலுக்குள் சென்றார்.
ராணுவத்தினரின் உதவியுடன் கடந்த வாரத்தில் நாகப்பட்டிணம் பகுதி மீனவர்கள் மீண்டும் கடலுக்குத் திரும்பினர். ஆனால், வடசென்னைப் பகுதி மீனவர்கள் இத்தனை நாட்களாக அச்சத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இன்று தான் காசிமேடு பகுதி மீனவர்கள் 11 படகுகளில் கிளம்பினர். அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து அவர்களை வழியனுப்பிவைத்தார். பின்னர் தானும் ஒரு படகில் ஏறிச் சென்றார். ஜெயக்குமாரும் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிது தூரம் பிற படகுகளுடன் சென்ற ஜெயக்குமார் அவர்களை வழியனுப்பிவிட்டு கரைக்குத் திரும்பினார்.
Comments
Story first published: Thursday, January 13, 2005, 5:30 [IST]