For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

19ம் தேதி விஜயேந்திரர், ரகு ஜாமீன் மனு விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு:

Vijayendrarவிஜயேந்திர், அவரது தம்பி ரகு, சங்கர மட மேலாளர் சுந்தரசே அய்யர் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் 19ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விஜயேந்திரர், ரகு, இந்த வழக்கோடு மடத்தின் கணக்கு வழக்கு மோசடியிலும்கைதாகியுள்ள சுந்தரசே அய்யர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை ஜாமீனில் விடக் கோரி இருவரும் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று விசாரைணக்கு வந்தன. அப்போது இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகநீதிபதி அக்பர் அலி அறிவித்தார்.

முன்னதாக விஜயேந்திரரின் ஜாமீன் மனு 17ம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. அது இப்போது மேலும் 2 நாட்களிக்கு தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.

சகோதரர்கள் சந்திப்பு:

இதற்கிடையே சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயேந்திரரை அவரது சகோதரர்களான பிரபாகர், குமார் ஆகியோர்இன்று சந்தித்துப் பேசினர்.

கலவை மடத்தில் குவியும் பக்தர்கள்:

இதற்கிடையே கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை சந்திக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துவிட்டது.

நேற்று அவரை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம், இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் ஆகியோர் சந்தித்தனர்.இன்றும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க மடத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடரும் பூஜைகள்:

இதற்கிடையே இன்று மூன்றாவது நாளாக ஜெயேந்திரர் சந்திரமெளலீஸ்வரருக்கு தனுர் மாச பூஜைகளை தடையின்றி நடத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X