நிவாரண அரிசி மூட்டைகளை கடத்தியவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தருவதற்காக வைத்திருந்த அரிசி மூட்டைகளை கடத்தி வீட்டில்பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்த்து நாடே பதைத்துப் போயிருக்க, மனிதாபிமானமற்ற சிலர் இறந்தவர்களின் உடலில்இருந்த நகைகளைத் திருடிய கொடுமையும் நடந்தது.
இப்போது சென்னையில் நிவாரண அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. சென்னை காசிமேடுபவர்குப்பம் பகுதியில் வசித்து வரும் ராஜி (55) என்பவர் நிவாரண அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது.
அதையடுத்து அவரது வீட்டில் போலீஸார் சோதனையிட்டனர். அங்கு நிவாரணத்திற்காக கொடுக்கப்பட்ட 60 கிலோஎடைகொண்ட 45 அரிசி மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காசிமேடு போலீஸார் ராஜியை கைதுசெய்தனர்.













Click it and Unblock the Notifications