மடத்தை கைப்பற்ற விடமாட்டோம்: வாஜ்பாய்
டெல்லி:
காஞ்சி மடத்தை கைப்பற்றும் எடுக்கப்படும் எந்த முயற்சியையும் பாஜக எதிர்க்கும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது நடவடிக்கையை கண்டித்து ஒருவார போராட்டத்தை பாஜக நடத்துகிறது. இதை தொடங்கிவைத்து வாஜ்பாய் பேசியதாவது:
காஞ்சி மடத்தின் புனிதத்தை கெடுத்து, அதை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. அத்தகையநடவடிக்கைகளை பாஜக முழு மூச்சுடன் எதிர்க்கும்.
சங்கர மடத்தை கைப்பற்றும் திட்டம், இந்து சமுதாயத்துக்கு விடப்பட்ட சவால். அதை நாங்கள் ஏற்கிறோம். இத்தகைய அநீதியைசெய்ய தமிழக அரசு உறுதியாக இருந்தால், அதை அமைதியான வழியில் எதிர்க்க நாம் தயாராக வேண்டும்.
நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நாம் அநீதியை இழைக்க மாட்டோம். அதே நேரத்தில் அநீதிநடப்பதையும் அனுமதிக்க மாட்டோம். பழி வாங்கும் நடவடிக்கைக்கு எப்போதும் பணிய மாட்டோம்.
சங்கராச்சாரியார்களை சிறையில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. சட்டங்களை மதித்து மாநில அரசு நடக்க வேண்டும்என்று கூறினார்.












Click it and Unblock the Notifications