கலவையில் ஜெயேந்திரரை சந்தித்தார் ரஜினிகாந்த்
கலவை:
கலவை சங்கர மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆசி பெற்றார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர் ஆற்காடு அருகே உள்ள கலவை கிராமத்தில் உள்ள சங்கரமடத்திற்குச் சொந்தமான மடத்தில் தங்கியுள்ளார்.
அங்கு அவரை தினசரி ஏராளமானோர் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர். இந் நிலையில் ரஜினிகாந்த் கலவை வந்துஜெயேந்திரரை சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த அவரிடம் ஜெயேந்திரரிடம் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவரிடம் எதுவும்பேசவில்லை. ஆசிர்வாதம் பெறவே வந்தேன். வேறு விசேஷம் எதுவும் இதில் இல்லை என்று கூறி விட்டுச் சென்றார்.
சுமார் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் ஜெயேந்திரருடன் இருந்தார்.
சசிகலா வருவதாக வதந்தி:
இதற்கிடையே ஜெயலலிதாவின் தோழி சசிகலா கலவைக்கு வரவுள்ளதாக வதந்தி கிளம்பியதால் கலவை கிராமத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
கலவை மடம் முன்பு ஏராளமான பேர் கூடினர். ஆனால் அது வெறும் வதந்தி, சசிகலா வரவில்லை என்று மட நிர்வாகிகள் விளக்கிய பின்னர்கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.