சட்டீஸ்கர் செல்லும் தமிழக அதிரடிப்படை
ராய்ப்பூர்:
வீரப்பனை வேட்டையாடி வீழ்த்திய தமிழக சிறப்பு அதிரடிப்படையின் 2 கம்பெனி வீரர்கள், சட்டீஸ்கர் மாநிலத்தில்நக்சலைட்டுகளை வேட்டையாட செல்லவுள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. நக்சலைட்டுகளால்பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த டிஜிபிக்கள், உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் சிறப்புஅதிரடிப்படை டிஜிபி விஜயக்குமார் கலந்து கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அனில் செளத் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் சட்டீஸ்கர் மாநிலஉள்துறை அமைச்சர் பிஜ்மோகன் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டீஸ்கர் மாநிலத்தில் சுர்குஜா, பாஸ்டார் ஆகிய பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இப்பகுதிகளில்சட்டீஸ்கர் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேட்டையை வலுப்படுத்தும் வகையில் தமிழக விசேஷ அதிரடிப்படையின் 2 கம்பெனி வீரர்கள் சட்டீஸ்கர் வரவுள்ளனர்.காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதிலும் காட்டை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் உளவு நடவடிக்கைகளைமேற்கொள்வதிலும் தமிழக வீரர்கள் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.
நக்சலைட்டுகளை ஒடுக்க அனைத்து உதவிகளையும் சட்டீஸ்கர் போலீஸாருக்கு செய்யத் தயாராக இருப்பதாக விஜயக்குமாரும்உறுதியளித்துள்ளார். நக்சலைட் வேட்டையில் ஈடுபட்டுள்ள சட்டீஸ்கர் காவல்துறையைச் சேர்ந்த 150 போலீஸாருக்கு, தமிழகசிறப்பு அதிரடிப்படை வீரர்கள் சிறப்பு பயிற்சி அளிக்கவுள்ளனர் என்றார் அவர்.