சங்கரராமன்: மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 25 பேரில் இதுவரை 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கதிரவன், சின்னா, மீனாட்சி சுந்தரம், அனில்குமார், மாட்டு பாஸ்கர் மற்றும் அம்பி என்ற அம்பிகாபதி ஆகியோர்குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கூலிப் படையைச் சேர்ந்த குமார் மற்றும் அனந்தகுமார்ஆகிய இருவரும் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications