ஜெ அரசை டிஸ்மிஸ் செய்ய பாஜக கோரிக்கை
கலவை:
ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று முதல் ஜனவரி 22ம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரை அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன் சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்தஅவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மடத்தின் மீது தமிழக அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் ஜெயேந்திரர் தொடர்ந்து மெளன விரதம் இருந்து வருகிறார்.இதனால் அமைதி திரும்பி விட்டது என்று கூற முடியாது.
வழக்கு விசாரணையில் இருக்கும்போது அதைப் பற்றி கருத்து கூறுவது முறையல்ல. ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்குப் பின்னணியில்ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்பது எதிர்காலத்தில் தெரியவரும்.
காஞ்சி மடத்தை ஏற்று நடத்தும் எண்ணமில்லை என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இந்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்என்று விரும்புகிறோம்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது செய்யப்பட்டது இந்து மதத்தை அழிக்கும் நோக்கத்தில் சங்கர மடத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்டபோராகும். அவர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்றும் பாஜக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி (இன்று) முதல் 22ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்.
ஜெயேந்திரர் கைது தொடர்பாக பாஜகவின் கோரிக்கைகளை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டதை முதல்வர் ஜெயலலிதாகண்டித்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக அவர் சட்டசபையில் பேச முடியும் எனும்போது, அது குறித்து வாஜ்பாய் கருத்துதெரிவித்ததில் தவறேதும் இல்லை என்று கூறினார்.