எம்ஜிஆர் பிறந்தநாள்: ஜெ. மாலை
சென்னை:
![]() |
எம்.ஜி.ஆர் பிறந்த திாளையொட்டி அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டிசென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பிறந்த நாள் மலரை அவர் வெளியிட்டார். அதை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மரணமடைந்த 57 அதிமுகவினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 குடும்ப நலநிதியாக ஜெயலலிதா வழங்கினார்.
இதேபோல கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள்உள்ளிட்டோர் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்தனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை அதிமுகவினரும், எம்.ஜி.ஆரின் அபிமானிகளும் கொண்டாடினர்.













Click it and Unblock the Notifications