For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயேந்திரரை வட நாட்டுக்கு அனுப்ப கோரும் மனு 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Jayendrarஜெயேந்திரர் தென் இந்தியாவில் தங்கியிருக்கத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதானவிசாரணை வருகிற 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது அவர் காஞ்சி மடத்துக்குச்செல்ல தடை விதித்தது. இதனால் அவர் கலவையில் தங்கியிருக்கிறார்.

இந் நிலையில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ஜெயேந்திரர் தென் இந்தியமாநிலங்களை விட்டு வட நாட்டில் தங்கியிருக்க உத்தரவிட வேண்டும், தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடஉத்தரவிட வேண்டும் என்று அதில் அரசு கோரியது.

மேலும், ஜாமீன் மனு விசாரணையின்போது இந்தக் கொலை வழக்குத் தொடர்பான ஆதாரங்கள் குறித்து போலீசார்மீது சந்தேகம் எழுப்பி தெரிவித்த சில கருத்துக்களை உச்ச நீதிமன்றம் வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிஇன்னொரு மனுவையும் தமிழக அரசு தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற 21ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

ஆடிட்டர் வழக்கில் மேல்முறையீடு:

அதேபோல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனை எதிர்த்து தமிழக அரசுதாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X