For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏற்காடு பெண்கள் நிர்வாணப் பூஜை ரத்து

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உள்ள வெள்ளக்கடை கிராமத்தில் போலீஸ் கண்காணிப்பு காரணமாக பெண்களின் நிர்வாணப் பூஜைரத்து செய்யப்பட்டது.

இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தையொட்டி பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிர்வாணப் பூஜை நடத்தப்படுவதுவழக்கம்.

மழை வேண்டியும், கிராமத்தை நோய்கள் தாக்காமல் இருக்கவும் வேண்டி இந்த பூஜை நடத்தப்படுகிறது. ஆனால், இதை மறைந்திருந்துபார்க்க சேலத்தையும் சுற்று வட்டாரத்தையும் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஏற்காடு மலையேறுவது வழக்கம்.

இதையடுத்து இந்த நிர்வாண பூஜைக்கு கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அமைப்பினர் மற்றும் சமூக நல அமைப்புகள் கடும் எதிர்ப்புதெரிவித்து வந்தன. இதைத் தொடர்ந்து போலீஸார் இந்தப் பூஜையை தடுத்து வருகின்றனர்.

இந் நிலையில், இந்த ஆண்டும் நிர்வாணப் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 9 மணிக்கு நிர்வாணப் பூஜைநிடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு ஆண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து வெள்ளக்கடை கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நிர்வாணப் பூஜை நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் கடும்நிடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் இன்று காலை திட்டமிட்டபடி நிர்வாணப் பூஜைநடக்கவில்லை.

நிர்வாண பூஜை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் வேறு நாளில் நடைபெறும் எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர். நிர்வாணப் பூஜைக்குப்பதில் எருதாட்டம் எனப்படும் நிகழ்ச்சி மட்டும் இன்று நடத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X