ராணுவ வீரருக்கு வாழ்நாள் சிறை!

Subscribe to Oneindia Tamil

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே பெண் கொடுக்காத தகராறில் 2 பேரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கஉத்தரவிட்டு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் விஜய காண்டீபன். இரு ஆண்டுகளுக்கு முன் தனக்குப் பெண் தர மறுத்ததனது தாய்மாமன் சீனிவாசன், அவரது மனைவியை இவர் சுட்டுக் கொன்றார்.

பின்னர் அவர்களது 2 மகள்கள் உள்ளிட்ட 5 பேரை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். இதில் 5 பேரும் படுகாயமடைந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காண்டீபன் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை பெரியகுளம்விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார். அதில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் அடிப்படையில், குற்றவாளி விஜயகாண்டீபனுக்கு அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் அவருக்கு ரூ. 1.91 லட்சம்அபராதமும் விதித்தார்.

துப்பாக்கிச் சூட்டால் படுகாயமடைந்த 5 பேருக்கும் இந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ரேவதி உத்தரவிட்டார்.

தீர்ப்பைத் தொடர்ந்து விஜய காண்டீபன் மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+