ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த ஜெயேந்திரர் மனு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள் கிழமை மனுத் தாக்கல் செய்ய ஜெயேந்திரர்முடிவெடுத்துள்ளார்.
இது தொடர்பாக சங்கர மட வழக்கறிஞர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் திங்கள்கிழமை ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறோம்.
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். ரவி சுப்பிரமணியத்தின் ஒப்புதல்வாக்குமூலத்தைத்தான் போலீஸார் பெரிதும் நம்பியுள்ளனர்.
அந்த வாக்குமூலம் எங்களைப் பெரிதும் பாதிக்காது. ஏனென்றால் ஜெயேந்திரருக்கு எதிராக வலுவான ஆதாரம் எதுவுமில்லைஎன்று கூறினார்.












Click it and Unblock the Notifications