தமிழகத்தில் பக்ரீத்: சிறப்புத் தொழுகைகள்
சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும்சிறப்புத் தொழுகைகள் நடந்தன.
பக்ரீத்தையொட்டி சென்னை, கோவை, மதுரை என தமிழகத்தின் முக்கிய நகர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
கலாம் தொழுகை:
இதற்கிடையே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பக்ரீத் பண்டிகையையொட்டி தொழுகையில் ஈடுபட்டார்.
காலை 8.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தொழுகை அறையில் அவர் தொழுகை நடத்தினார். அவர்விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அன்பு, தியாகம் ஆகியவற்றை பக்ரீத் பண்டிகை குறிக்கிறது. பண்டிகையைக் கொண்டாடும்அதே வேளையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்த நன்னாளில் நாம் முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலாமுக்கு தொலைபேசி மூலம் தங்களது பக்ரீத்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications