ஆங்கிலத்தில் சினிமா பெயர்: திருமாவுக்கு திருநா பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மொழியைச் சொல்லி திரைப்படக்காரர்களை மிரட்டக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னாபுரி காளிகாம்பாள் என்ற புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கலந்து கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவதுநல்லதுதான். ஆனால் அதை கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ வலியுறுத்தக் கூடாது.

சில காரணங்களுக்காக தமிழ்ப் படங்களுக்கு சில நேரங்களில் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். இதனால்தமிழ் மொழி ஒன்றும் அழிந்து போய் விடாது. அனைத்துப் படங்களுமா ஆங்கிலப் பெயர்களில் வருகிறது?

தமிழில் பெயர் வையுங்கள் என்று திரை உலகினரிடம் எடுத்துச் சொல்லலாம். அதற்காக தமிழ் மொழியைச் சொல்லிஅவர்களை மிரட்டக் கூடாது. அவர்களது தொழிலை செய்ய விடாமல் இடையூறு செய்யக் கூடாது. இதில் அரசியல்நுழைந்து விடக் கூடாது.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. பல மொழி ஆதிக்கங்கள்,பல்வேறு படையெடுப்புகளைத் தாண்டி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி தமிழ். எனவே சினிமாவுக்குதமிழ் பெயர் வைக்காத காரணத்தால் அந்த மொழி அழிந்து விடும் என்பதை ஏற்பதற்ககில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+