கொல்கத்தாவில் பிப்.13ல் சுனாமி கிரிக்கெட்
கொல்கத்தா:
மத்திய அரசு வரி விலக்கு அளிக்க ஒப்புதல் அளித்ததையடுத்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக அடுத்த மாதம் 13ம் தேதிகொல்கத்தாவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
சுனாமி நிதிக்காக உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஐ.சி.சி. நடத்துகிறது.மெல்போர்ன் நகரில் நடந்த முதல் போட்டியில் உலக லெவன் அணி வெற்றி பெற்றது.
இந் நிலையில் 2வது போட்டியை வரும் 13ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த ஐ.சி.சி. விருப்பம் தெரிவித்தது. ஆஸ்திரேலியா அரசுஅளித்ததுபோல் இந்தப் போட்டிக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு வரி விலக்கு அளிக்க ஒப்புதல் தெரிவித்தது. இதனையடுத்து அடுத்த மாதம் 13ம் தேதிகொல்கத்தாவில் 2வது போட்டி நடைபெறுகிறது. இத் தகவலை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா நிருபர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications