சென்னை: 1,500 கொத்தடிமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை செங்குன்றம் பகுதியில் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருந்த 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பூர்ணிமா அத்வானி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக பணியாற்றுவோர் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் தெரிவித்துவிசாரணை நடத்துமாறு கோரியிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக தற்போது செங்குன்றம் பகுதியில் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக, குடும்பத்துடன் வேலைபார்த்துக்கொண்டிருந்த 1,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மறுவாழ்வு உதவிகளை அளிக்கிறது என்றார் பூர்ணிமா அத்வானி.












Click it and Unblock the Notifications