ஆஸி. ஓபன் டென்னிஸ்: செரீனாவிடம் சானியா தோல்வி
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா அமெரிக்காவின் செரீனாவில்லியஸிடம் தோல்வி அடைந்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 18 வயது சானியா, முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சின்டி வாட்சனை தோற்கடித்தார். 2வது சுற்றில்ஹங்கேரியின் பெட்ரா மன்டுலாவை வீழ்த்தினார். இதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 3ம் சுற்றுக்கு முன்னேறிய முதல்இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
இந் நிலையில் இன்று செரீனா வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில்செரீனா வில்லியம்ஸ் எளிதில் வெற்றி பெற்றார்.
மகேஷ் பூபதி இணை வெற்றி:
ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் மகேஷ்பூபதி, ஆஸ்திரேலியாவின் உட்பிரிட்ஜ் இணை, ரஷ்யாவின்ஆண்ட்ரீவ், டேவிடென்கோ இணையை 6-4, 4-6, 6-2 என்ற செட்கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் காலிறுதிக்கு முந்தையசுற்றில் விளையாட தகுதி பெற்றது.
ஷரபோவா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்:
இதற்கிடையே ரஷ்யாவின் மரியா ஷரபேவா சீனாவின் லீ நாவை 6-0, 6-2 என்ற செட்களில் தோற்கடித்து 4 வது சுற்றிற்குமுன்னேறினார். வீனஸ், டேவன்போர்ட் வெற்றி:
இதற்கிடையே பெண்கள் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ், லிண்ட்சே டேவன்போர்ட் ஆகியோரும், ஆண்கள் பிரிவில் டிம்ஹென்மேன், லேடன் ஹெவிட் ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.