For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரருடன் ஸ்ரீசைலம் மடாதிபதி சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

கலவை :

Jeyandrarகலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரை ஸ்ரீசைலம் அன்னமாச்சார்ய மடாதிபதி விஷ்ணுவரதன் சந்தித்துப் பேசினார்.

சங்கரராமன் கொலை வழக்கில் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந் நிலையில் ஜெயேந்திரரை ஸ்ரீசைலம்அன்னமாச்சார்ய மடாதிபதி சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்கு பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜெயேந்திரர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடையத் தேவையில்லை. ஏனெனில் இதுஜோடிக்கப்பட்ட சாட்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையாகும்.

ஜெயேந்திரரை குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறும் வரை இந்த வழக்கை நடத்த வேண்டும். ஜெயேந்திரர் மெளன விரதத்தில் இருக்கிறார்.அவருக்கு ஆந்திர மக்கள் சார்பாக ஆறுதல் கூறினேன். அப்போது அவர் ஆசி வழங்கினார்.

காஞ்சி மடத்தில் நடக்கும் அனைத்து பூஜைகளும் கலவை மடத்திலும் நடக்கிறது. பக்தர்கள் ஜெயேந்திரரைத் தொடர்ந்து சந்தித்து தங்களதுஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.

நேரம் எல்லோருக்கும் எப்போதும் நன்றாக இருக்காது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அது இப்போது நன்றாக இருப்பதால் அவர் இப்படிஎல்லாம் செய்கிறார். 3 மாதத்தில் அவருக்கு நேரம் சரியில்லாமல் போய்விடும். அப்போது ஜெயேந்திரர் விவகாரத்தில் எல்லாம்தலைகீழாக மாறி விடும் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X