ஸ்டாலின் கூட்ட மேடை திடீர் அகற்றம்

Subscribe to Oneindia Tamil

பாலக்கோடு:

பாலக்கோட்டில் திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் கலந்து கொள்ளவிருந்த பொதுக்கூட்ட மேடை திடீரென அகற்றப்பட்டது.

பாலக்கோட்டில் ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பாலக்கோடு பேருந்து நிலையம்எதிரில் கூட்டம் நடத்த போலீஸாரிடம் திமுகவினர் அனுமதி கோரினர்.

பேருந்து நிலையத்தில் பணிகள் நடப்பதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பழைய ஸ்டேட் வங்கி எதிர்புறம் கூட்டம் நடத்த போலீஸார்அனுமதி கொடுத்தனர். அதனையடுத்து அங்கு திமுகவினர் மேடை அமைத்தனர்.

இந் நிலையில் அங்கு வந்த டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் மேடை போக்குவரத்திற்கு இடையூறாகஇருப்பதாகக் கூறி அதை அகற்றக் கூறினர். அதற்கு திமுகவினர் மறுப்பு தெரிவித்தனர்.

அதனையடுத்து பாலக்கோடு தாசில்தார் முருகேசன் மற்றும் டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் ஆகியோர் கிராம ஊழியர்களுடன் வந்து மேடையைப்பிரித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் டி.எஸ்.பி., கிருஷ்ணராஜூடன் மாவட்ட திமுக பொறுப்பாளர் கோவிந்தசாமி,முன்னாள் திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் உள்ளிட்ட திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் சாலையையொட்டி பத்து அடிக்கு மேடை அமைக்கஅனுமதி வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+