ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கை முறிவு
சென்னை:
ரஷியாவில் பனிப் புயலில் சிக்கி மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் இளங்கோவனுக்கு கை முறிவு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பண்ணாரியில், மேட்டுப்பாளையம்-சாம்ராஜ் நகர் (கர்நாடகம்) அகல ரயில் பாதை ஆய்வுப் பணி தொடக்க விழாநடந்தது. இதில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, மத்திய சமூக வளர்ச்சித் துறை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியில் இளங்கோவனும் கலந்து கொண்டார்.
கையில் கட்டுடன் வந்த அவரிடம் அமைச்சர் வேலு, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் நலம் விசாத்தனர். அதற்கு இளங்கோவன்,சமீபத்தில் ரஷியாவுக்கு மத்திய வர்த்தகத் துறை குழுவினருடன் சென்றிருந்தேன். லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்திற்குச் சென்று விட்டுகாரில் திரும்பிக் கொண்டிருந்தோம்.
அப்போது பலத்த பனிப்புயல் வீசியது. இதில் எனது காரும் சிக்கிக் கொண்டது. இதையடுத்து காரிலிருந்து இறங்கி நடந்தோம். அப்போதுபனியில் சறுக்கி கீழே விழுந்தேன். அதில் கையில் கையில் முறிவு ஏற்பட்டது.
ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் எனது தொகுதியில் நடக்கும் விழா என்பதால் வந்தேன்என்று விழாவின்போது அவர் விளக்கமளித்துப் பேசினார்.
கை முறிவு ஏற்பட்ட இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.