நிவாரண பணிகளுக்கு குழுக்களை அமைத்தார் ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

House construction work in Nagai

சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட, ஊராட்சி அளவிலான குழுக்களை அமைத்து முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

சுனாமி நிவாரணத்துக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதியை முறையாகவும், உரிய முறையிலும் செலவிட வகை செய்யும் விதத்தில்,அனைத்ததுக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், சுனாமி நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மாவட்ட மற்றும்ஊராட்சி அளவிலான குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கை:

சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிவாரணப் பணிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. இந்தப்பணிகளை மத்திய அரசு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை வெகுவாகப் பாராட்டியுள்ளன.

கடந்த 7ம் தேதி எனது தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூறப்பட்ட ஆலோசனைகளையும் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.

இந் நிலையில் மூன்றாவது கட்ட நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளை சிறப்பாக செய்யும் பொருட்டு மாவட்ட மற்றும் ஊராட்சி அளவிலான குழுக்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டித் தருவது, அனைத்து வாழ்வாதார உதவிகளையும் வழங்குவது இந்தமூன்றாவது கட்ட நிவாரணப் பணிகளில் உறுதி செய்யப்படும்.

அதன்படி தலைமைச் செயலாளர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம்,நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடும். இதுதவிர மாவட்ட, ஊராட்சி மற்றும் வார்டு அளவிலான ஆலோசனைக் குழுக்களும்அமைக்கப்படவுள்ளன.

மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராக இருப்பார். இக்குழுவில் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஆட்சித் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனப்பிரதிநிதிகள் இடம் பெறுவர்.

ஊராட்சி அளவிலான குழுக்களில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மீனவர் பிரதிநிதிகள், கிராமநிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், ஆட்சித் தலைவரால் தேர்வு செய்யப்படும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனப்பிரதிநிதிகள் இடம் பெறுவர்.

இக் குழுக்கள் அடிக்கடி கூடி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவர் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+