ஸ்ரீனிவாசாச்சாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
காஞ்சிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட உத்திராதி ஸ்ரீவைணவ மடத்தின் நிர்வாகி ஸ்ரீனிவாசாச்சாரின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்குப் பின்புறம் உள்ள இந்த உத்திராதி மடத்தின் நிர்வாகியாக இருந்த ஸ்ரீனிவாசாச்சார் சில தினங்களுக்கு முன் நள்ளிரவில்படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உறவினர்கள் யாரும் வராததால் ஸ்ரீனிவாசாச்சாரின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடல் அழுகும் நிலைக்குச்சென்ற நிலையில் நேற்று தான் பீகாரிலிருந்து அவரது உறவினர்கள் வந்து சேர்ந்தனர்.
இன்று அவர்கள் உடலை முறைப்படி பெற்றுக் கொண்டனர். காஞ்சிபுரம் கொண்டு சென்று அங்கு ஸ்ரீனிவாசாச்சாரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக அவரதுஉறவினர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications