ஆட்டோ பாஸ்கர் சாவு: சிபிஐ விசாரணை கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த ரெளடி ஆட்டோ பாஸ்கர் போலீஸ் நிலையத்தில் இறந்ததுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆலடி அருணா கொலை கடந்த டிசம்பர் 31ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஆட்டோ பாஸ்கர் என்ற ரெளடியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி காவல் நிலையத்தில் வைத்து பாஸ்கரிடம் விசாரணை நடந்து வந்தது. விசாரணையின்போது பாஸ்கர்மர்மமாக இறந்தார்.

அவர் இறந்த விவரத்தை அவரது உறவினர்களிடம் போலீஸார் மிகவும் தாமதமாகவே தெரிவித்தனர்.

இந் நிலையில் மதுரையைச் சேர்ந்த பியர்ல் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஆட்டோ பாஸ்கர் போலீஸ் விசாரணையின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாக போலீஸார் கூறுகின்றனர்.

போலீஸ் கட்டுப்பாட்டில் இறந்த பாஸ்கரின் சாவில் மர்மம் உள்ளதாக சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+