சுனாமி: நாளை விடுதலைப் புலிகள் துக்கம் அனுஷ்டிப்பு
கிளிநொச்சி:
சுனாமி பேரலைகளுக்குப் பலியானவர்களின் நினைவாக நாளைய தினத்தை (ஜனவரி 26) துக்க நாளாக அனுசரிக்க விடுதலைப் புலிகள்முடிவு செய்துள்ளனர்.
வட-கிழக்கில் மட்டுமின்றி தெற்காசியாவில் பலியான அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதத்தில் இந்த தினத்தை அனுசரிக்கப்போவதாக புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழ் மக்கள் போர் காரணமாக சொல்லொணா துயரம் அனுபவித்தனர். போர் நிறுத்தம்காரணமாக கடலோரத்தில் வாழும் மீனவ தமிழர்களுக்கு மீண்டும் புனர்வாழ்வு கிடைக்க வழி பிறந்தது.
இந்த நிலையில் தான் பேரழிவு மிக்க சுனாமி அலைத் தாக்குதல் ஏற்பட்டு வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியது. கடலோரப் பகுதிகளில்வசிக்கும் எங்கள் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழந்துள்ளனர், உறவுகளை இழந்துள்ளனர். நண்பர்கள், உறவினர்கள், முகாம்களில் தஞ்சம் புக வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.
இந்த பேரழிவில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 26ம் தேதியை துக்க தினமாக அனுஷ்டிக்கிறோம். இந்ததினத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் அனைத்திலும் நினைவு விளக்குகளை ஏற்ற வேண்டும்.
தமிழர் பகுதிகளில் கனடா உதவி:
இதற்கிடையே மட்டக்களப்புக்கு அருகே உள்ள பாண்டிருப்பு பகுதியில் கனடா நாட்டு ராணுவம் மருத்துவ முகாம் அமைத்து சுனாமியால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் பாதிாக்கப்பட்ட சில பகுதிகளில் நீர் சுத்திகரிப்புக் கருவிகளைக் கொண்டு குடிநீரை சுத்தப்படுத்தி சுகாதாரமான நீரை வினியோகம்செய்யும் பணியிலும் கனடா ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இலங்கை அரசு உதவவில்லை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு இலங்கை அரசு போதிய உதவிகளைச் செய்யாமல் கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
வட-கிழக்கைச் சேர்ந்தவர்கள் நிவாரண உதவி கோரிச் செல்லும்போது பல பக்க விண்ணப்பங்களைக் கொடுத்து அங்கும், இங்கும் அலையவிட்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர் இலங்கை அரசு அதிகாரிகள்.
சுனாமியைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த நிதி உதவியில் வட-கிழக்குப் பகுதி மக்களுக்கு உரிய பங்கு போய்ச் சேரவே இல்லை.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications