சுனாமி புரளியை போக்க கடற்கரையில் முகாமிடும் கலெக்டர்!
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே நிலவும் சுனாமி அச்சத்தைப் போக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால்மற்றும் அதிகாரிகள் நாளை காலை முதல் குளச்சல் கடற்கரையில் முகாமிடவுள்ளனர்.
தமிழக கடலோரப் பகுதிகளை நாளை மீண்டும் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்ற புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது.
ஆனால் இது வெறும் புரளி தான் என்று பூகம்பவியல் துறை நிபுணர்களும், வானிலை ஆராய்ச்சியாளர்களும் தெளிவுபடுத்தினாலும் சிலபகுதி மக்கள் இதை காதில் வாங்க மறுக்கின்றனர். அப் பகுதிகளை விட்டு வெளியேறியும் வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் அதிகாரிகள், நாளை காலை 6 மணி முதல் குமரிமாவட்டத்தில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொளச்சல் பகுதியில் முகாமிடுகிறார்கள்.
இதுகுறித்து சுனில் கூறுகையில், தமிழக கடற்கரைப் பகுதிகளில் மீண்டும் சுனாமி தாக்காது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இதுதொடர்பாகமக்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் வரை கொளச்சல் பகுதியில் தங்கப்போகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications