For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எளிமையான குடியரசு தினம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Republic day celebrations
சுனாமி சோகத்தில் இருந்து இன்னும் வெளியேறாத தமிழகத்தில் இன்று நாட்டின் 56வது குடியரசு தின விழா மிக எளிமையாகக்கொண்டாடப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியேற்றி வைத்து முப்படையினர்,காவல்துறையினர், என்.சி.சி., சாரணர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் முதல்வர் ஜெயலலிதா அண்ணா வீர பதக்கம், காந்தி விருது, கோட்டை அமீர் விருது ஆகியவற்றை வழங்கினார்.

திருட்டு மணல் கடத்தலைத் தடுக்க முயன்றபோது லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட 3 தாசில்தார்களுக்கும் வீர தீரச் செயலுக்கான அண்ணா வீரப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. கொல்லப்பட்ட தாசில்தார்களின் குடும்பத்தினரிடம் அண்ணா தங்கப் பதக்கம், ரூ. 10,000 ரொக்கப் பரிசுஆகியவற்றை ஜெயலலிதா வழங்கினார்.

Republic day celebrations
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் துணைத் தாசில்தாராகப் பணியாற்றி, மணல் திருட்டைத் தடுக்க முயன்று லாரி ஏற்றிக்கொல்லப்பட்ட ஏ.ஆர். வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தாராக இருந்து கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி மணல்திருட்டைத் தடுக்க முயன்று லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட ஜி.புண்ணியகோட்டி, காஞ்சிபுரம் வட்ட வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிமணல் திருட்டை தடுக்க முயன்று லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோரின் குடும்பத்தினர் இவற்றைப் பெற்றுக்கொண்டனர்.

அதே போல திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி தாசில்தாராகப் பணியாற்றி மணல் திருட்டைத் தடுக்க முயன்று லாரி ஏறியதால், இருகால்களும் நசுக்கப்பட்டு, சக்கர நாற்காலியுடன் பணியாற்றி வரும் நடராஜனுக்கும் அண்ணா வீரப் பதக்கத்தை ஜெயலலிதா வழங்கினார்.

மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பழனியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீதுக்கு வழங்கப்பட்டது.

கள்ளச் சாராயத்தை ஒழித்த செங்கை கிழக்கு மாவட்ட கூடுதல் எஸ்பி செந்தில்குமாரி, விழுப்புரம் கூடுதல் எஸ்பி லட்சுமி, கோவை டிஎஸ்பிநந்தகுமார், உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுசில்குமார் ஆகியோருக்கு மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டது.

Republic day celebrations
சுனாமி சோகத்தையொட்டி, இந்த ஆண்டு தமிழகம் முழுவதுமே குடியரசு தின விழா மிகவும் எளிமையாக நடத்தப்படுவதுகுறிப்பிடத்தக்கது. வழக்கமாக நடக்கும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. வழக்கமாக நடக்கும் கலை நிகழ்ச்சிகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

ஜெயலலிதா, ஆளுநர் பங்கேற்ற விழா 20 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. இதே போல மாநிலம் முழுவதும் நடந்த எளிமையானவிழாக்களில் மாவட்டத் தலைநகர்களில் ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்தனர்.

குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X