பாக். தொடரில் விளையாட தயார்: பாலாஜி
சென்னை:
தான் முழு உடல் தகுதி பெற்றுள்ளதாகவும் இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில்விளையாட தயாராக உள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான எல்.பாலாஜிகூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளரான எல்.பாலாஜி, பாகிஸ்தான் சென்ற இந்திய அணியில் இடம் பெற்று,அந்நாட்டு வீரர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்ந்தார்.
பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் விளாசித் தள்ளி பாகிஸ்தான் மக்களைக் கவர்ந்தார். காயம் காரணமாககடந்த சில மாதங்களாக விளையாடாமல் உள்ள பாலாஜி தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் முழுமையாக குணமடைந்துள்ளேன். இதை இந்திய அணியின் உடற் பயிற்சியாளர் ஆண்ட்ரூ லைபஸிடம்தெரிவித்துள்ளேன். அணியில் சேர்ந்து விளையாடத் தயார் என்றும், அணியில் சேர்க்கக் கோரியும் இந்தியகிரிக்கெட் வாரியத்திற்குத் தெரிவிக்கவுள்ளேன்.
பிப்ரவரியில் மும்பையில் நடைபெறும் சாலஞ்சர் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி எனது உடல்தகுதியை நிரூபிப்பேன். பாகிஸ்தானுடனான தொடரில் பங்கேற்க மிகவும் ஆவலாக உள்ளேன் என்றார் பாலாஜி.