மகாராஷ்டிரா: திருவிழா நெரிசல் பலி 258 ஆக உயர்வு
சதாரா:
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 258 பேர் பலியாகியுள்ளனர்.
வகி என்ற இடத்தில் மலைக் குன்றின் மீது அமைந்துள்ள மந்த்ராதேவி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவையொட்டி நேற்றுசுமார் 5 லட்சம் பேர் கூடியினருந்தனர்.
கோவிலின் நுழைவு வாயில் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததையடுத்து சிலருக்கு லேசான ஷாக் அடித்தது.
இதையடுத்து கூட்டத்தினர் சிதறி ஓட ஆரம்பித்தனர். நுழைவு வாயில் மிகக் குறுகலாக இருக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவரை மீறிஒருவர் ஓட முயன்றனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுமாறி விழுந்தனர். அவர்கள் மீது ஏறி, மிதித்தபடிகூட்டத்தினர் சிதறி ஓடினர்.
இந்த நெரிசலில் மிதிபட்டும் மூச்சு திணறியும் 248 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும்குழந்தைகள். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
340 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications