10 நாட்களில் புதிய சங்கராச்சாரியார்!
கலவை:
கர்நாடக மாநிலம் மத்தூரை சேர்ந்த ஞானப்பிரசேந்திர சுவாமிகள் காஞ்சி மடத்தின் புதிய சங்கராச்சாரியாராக விரைவில்நியமிக்கப்படுகிறார்.
ஆடிட்டர் தியாகராஜனாக இருந்து ஞானப்பிரசேந்திர சுவாமிகள் ஆன இவர் இப்போது ஜெயேந்திரருக்கு உதவியாக கலவை மடத்தில்தங்கியுள்ளார். அவரை அடுத்த சங்கராச்சாரியாராக ஜெயேந்திரர் நியமிக்கவுள்ளார் என சங்கர மடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
இதை சங்கர மடம் மறுத்தாலும், ஞானப்பிரசேந்திர சுவாமிகள் இன்னும் 10 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக புதிய சங்கராச்சாரியாராகநியமனம் செய்யப்படவுள்ளதாக கலவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரியவர், இளையவருக்கு அடுத்த நிலையில் பால பெரியவராக ஞானபிரசேந்திரர் நியமனமாகிறார்.
இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் ஜெயேந்திரரே இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்என்றும் கூறப்படுகிறது.