மீண்டும் டெஸ்மா: ஸ்டிரைக் செய்ய தடை!
சென்னை:
டெஸ்மா சட்டத்தின்படி 26 துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு சட்டம் எனப்படும் டெஸ்மா தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
இந் நிலையில் பொதுமக்கள் நலன் கருதியும், பொது அமைதி கருதியும் 24 அத்தியாவசியப் பணிகளில் வேலைநிறுத்தம் செய் தடை விதித்துஇச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, மின்சாரம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துப் பணிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பொது துப்புறவு உள்ளிட்டமக்கள் நல்வாழ்வுப் பணிகள், குடிநீர் வழங்கல், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய், கருவூலங்கள்,கால்நடை, பால் உற்பத்தி மற்றும் வினியோகம், சமூக நலன், சத்துணவுத் திட்டங்கள், கூட்டுறவு, பொது வினியோகத் திட்டம், கல்வி மற்றும்விளையாட்டு மேம்பாடு, வருவாய் நிர்வாகம்;
ஊரக வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது நிர்வாகம், வேளாண்மை, தோட்டக்கலை, நெடுஞ்சாலைகள், தொழில் வளர்ச்சி, வீட்டு வசதி,தொழிற்சாலைகள், வேலை வாய்ப்பு, நீர்ப் பாசனம், தலைமைச் செயலகம் ஆகிய 24 துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (நேற்று) முதல் அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
முன்பு இத்தகைய எச்சரிக்கையையும் மீறி வேலை நிறுத்தம் செய்த லட்சக்கணக்கான ஊழியர்கள் தமிழக அரசால் டெஸ்மா சட்டத்தின் கீழ்ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications