இதே நாளில்.. 30 நாட்களுக்கு முன்..
சென்னை:
![]() |
நாட்கள் கடந்துவிட்டாலும் சுனாமி ஏற்படுத்திய காயம் இன்னும் விலகவில்லை. வலியை மக்கள் மறக்கவில்லை.
2004, டிசம்பர் 26ம் தேதி வரை இந்தியர்களில் பெரும்பாலானவர்களுக்கு சுனாமி என்றால் என்ன என்றேதெரியாமல் இருந்தது. 26ம் தேதி காலை தமிழக, ஆந்திர, கேரள கடலோரப் பகுதிகள், இலங்கை மற்றும்அந்தமான், நிக்கோபார் தீவுகளை அலைகள் தாக்கி சீரழித்தபோதுதான் சுனாமியின் கொடூரம் தெரிய வந்தது.
தமிழகத்தில் சுமார் 10,000 பேரும், இலங்கையில் சுமார் 40,000 பேரும் ஒட்டுமொத்தத்தில் தெற்காசியாவில் 2.22லட்சம் பேரும் உயிரிழந்தனர்.
லட்சக்கணக்கானவர்கள் வீடுகள் இழந்திருக்க, கடலோர தமிழகத்தின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்துபோய்விட்டது. 10 லட்சம் மக்களின் வாழ்க்கை வீதிக்கு வந்துவிட்டது.
படகுகளை இழந்துவிட்டு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடியாத சோகத்தில் மீனவர்கள். தத்தளித்துக்கொண்டிருக்கிறது கடலோரத் தமிழகம்.
நாகை மாவட்டத்தில் மட்டும் 8,000 பேர் இறந்திருக்க, இன்னும் 1,900 பேரைக் காணவில்லை கூறுகிறது.
கடலூரில் 2,000க்கும் மேற்பட்ட சாவுகள். இதில் வேளாங்கண்ணியில் மட்டும் 1000 பேர்.
நிவாரணப் பணிகள் ஒரு பக்கம் முழு வீச்சில் நடந்து வந்தாலும், மனதளவில் மக்கள் அடைந்துள்ளவேதனைகளுக்கு எந்த நிவாரணமும் பதில் சொல்லிட முடியாது.
இந் நிலையில் மீண்டும் சுனாமி வருகிறது என்ற புரளிகள் ஒரு பக்கம். தமிழக கடல் பகுதிகளில் அலைகளோடு ஓடிவிளையாட கால்கள் இல்லை. இது கடலுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு தான்..













Click it and Unblock the Notifications