"குடும்பப் பெண்களை விருந்தாக்கிய கண்ணன்"
மதுரை:
உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பல குடும்பப் பெண்களை விருந்தாக்கியவர் ஏட்டையா கண்ணன் என்றுஜெகஜால ஜெயலட்சுமிவின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலட்சுமிக்கு எதிரான ஆதாரங்கள் என்று கூறி சில புகைப்படங்கள், வீடியோ கேசட்டுகளை சமீபத்தில் சிபிஐஅதிகாரியிடம் ஏட்டையா கண்ணன் வழங்கினார்.
இதுகுறித்து ஜெயலட்சமியின் வழக்கறிஞர் வெங்கடேசனிடம் கேட்டபோது,
ஏட்டு கண்ணன் திரும்பத் திரும்ப பொய்யையே கூறி வருகிறார். திரும்பத் திரும்ப ஒரே பொய்யைக் கூறுவதால்அது மெய்யாகி விடாது.
ஜெயலட்சமி மட்டுமல்லாது, பல குடும்பப் பெண்களையும் போலீஸ் அதிகாரிகளுக்கு விருந்தாக்கியவர்தான்இந்தக் கண்ணன். இதுகுறித்த முழு விவரங்களையும் ஜெயலட்சுமி ஏற்கனே சிபிஐ விசாரணயின்போதுதெரிவித்துள்ளார்.
ஜெயலட்சுமி தொடர்பான வீடியோ ஆதாரத்தை கண்ணன் காட்டுகிறார். அது உண்மையாக இருந்தால் அதைசட்டப்படி எதிர்கொள்வோம். யாரையோ திருப்திப்படுத்தவே வீடியோ ஆதாரம் இருப்பதாக திடீரென கூறுகிறார்கண்ணன் என்றார் வெங்கடேசன்.
இன்ஸ்பெக்டர் இளங்கோவனால் ஜெயலட்சுமியின் வீட்டில் எடுபிடியாக வைக்கப்பட்ட இந்த ஏட்டையா பின்னர்ஜெயலட்சுமியையை மேய்ந்தது குறிப்பிடத்தக்கது.