சதுர்வேதியின் காவல் பிப். 8 வரை நீட்டிப்பு!!
சென்னை:
போலிச் சாமியார் சதுர்வேதியின் சிறைக் காவல் பிப்ரவரி 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் ஆசிரமம் நடத்தி வந்த சதுர்வேதி, தனக்கு ஆசிரமம் வைக்க இடம் அளித்த தொழிலதிபர் சுரேஷ் என்பவரின்மனைவி மற்றும் மகளை கடத்திச் சென்று பாலியல் கொடுமைப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து சதுர்வேதியை ஹைதராபாத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர் ஆண், பெண் எனஇரு பாலாரிடமும் கட்டாயப்படுத்தி உறவு வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சதுர்வேதி குண்டர் சட்டத்தின் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.மற்ற பிரிவுகளின் கீழ் அவரது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வீடியோகான்பரன்சிங் மூலம் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டது.
சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிபதி பிரபுதாஸ் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள சதுர்வேதியுடன் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பிப்ரவரி 8ம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்துஉத்தரவிட்டார்.
அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட 7 பேரின் காவலும் பிப்ரவ 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications