ஜெயேந்திரர் வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி?
சென்னை:
திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயரட்சகன் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான கொலை வழக்கை இவர் விசாரிப்பார் என்று தெரிகிறது.
தமிழகத்தில் பல நீதிமன்றங்களின் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம், வேலூர் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் சேலம் இரண்டாவது விரைவு நீதிமன்றநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை தலைமை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராமுலு, கோவை 3வது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் 2வதுவிரைவு நீதிமன்ற நீதிபதி முகமது அலி, சேலம் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜோனதன் ஞானையா, திருச்சி 2வது விரைவு நீதிமன்ற நீதிபதியகாவும்,வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜகோபால், விருதுநகர் விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும்நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி 2வது விரைவு நீதிமன்ற நீதிபதி மேகநாதன், திருச்சி முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும், திண்டுக்கல் தலைமைகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயரட்சகன் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றுகூறப்பட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயரட்சகன்தான், ஜெயேந்திரர் மற்றும்விஜயேந்திரர் மீதான கொலை வழக்குகளை விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications