ஜெயேந்திரர் வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி?
சென்னை:
திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயரட்சகன் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான கொலை வழக்கை இவர் விசாரிப்பார் என்று தெரிகிறது.
தமிழகத்தில் பல நீதிமன்றங்களின் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம், வேலூர் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் சேலம் இரண்டாவது விரைவு நீதிமன்றநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை தலைமை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராமுலு, கோவை 3வது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் 2வதுவிரைவு நீதிமன்ற நீதிபதி முகமது அலி, சேலம் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜோனதன் ஞானையா, திருச்சி 2வது விரைவு நீதிமன்ற நீதிபதியகாவும்,வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜகோபால், விருதுநகர் விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும்நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி 2வது விரைவு நீதிமன்ற நீதிபதி மேகநாதன், திருச்சி முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும், திண்டுக்கல் தலைமைகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயரட்சகன் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றுகூறப்பட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயரட்சகன்தான், ஜெயேந்திரர் மற்றும்விஜயேந்திரர் மீதான கொலை வழக்குகளை விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications