தமிழர் பகுதிக்கு இந்தியா உதவ வேண்டும்: புலிகள்
கொழும்பு:
இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கும் இந்தியா நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என விடுதப்ை புலிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் பல மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிவாரணநிதியையும், உதவிப் பொருட்களையும் வழங்கியுள்ளன. ஆனால், இந்த உதவிகளை தெற்கு இலங்கைக்கே செலவிட்டு வரும் அந்நாட்டு அரசு சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை புறக்கணித்து வருகிறது.
இந் நியிையில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
சுனாமியய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை செய்து வரும் இந்தியா வடக்கு இலங்கை பக்கமும் தனது கனிவானபார்வையைத் திருப்ப வேண்டும். தெற்கு மற்றும் கிழக்கில் மட்டும் இந்திய உதவிகள் சென்றடைந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கும் இந்தியா உதவ வேண்டும், இந்த உதவிகள் எந்த வகையில் கிடைத்தாலும் அதைஏற்போம். எங்களுக்கு தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகிறது.
பல்லாண்டுகளாக போரால் துயரத்துக்குள்ளான எங்களுக்கு இந்தப் பேரழிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
தமிழர்கள் பகுதி மீதான இலங்கை அரசின் விரோத மனப்பான்மை தொடரத்தான் செய்கிறது. இதனால் தான் ஐநா பொதுச்செயலாளர் கோபி அன்னானையும் கனடா நாட்டு பிரதமரையும் எங்கள் பகுதிக்கு வர விடாமல் இலங்கை அரசு தடுத்துவிட்டது.
பல உலகத் தலைவர்கள் இப் பகுதியில் சுனாமி பாதிப்பை பார்வையிட விரும்பினாலும் அதை மனிதாபிமான அடிப்படையில்கூட இலங்கை அரசு அனுமதிக்கவில்லை என்றார் தமிழ்ச்செல்வன்.












Click it and Unblock the Notifications