அரசு அதிகாரியை தாக்கிய அதிமுகவினர்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மின்துறையில் வீணான பழைய கம்பங்கள், காப்பர், அலுமினியம்,செயல்படாத வாகனங்கள் மற்றும் பழைய இரும்பு பொருட்களை ஏலம் விட டெண்டர் கோரப்பட்டிருந்தது.
இதற்கான விண்ணப்பங்களை நேற்று மதியம் 2 மணிக்குள் விழுப்புரம் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு 15 அதிமுகவினர் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களதுடெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர்.
நேரம் முடிவடைந்துவிட்டதால் டெண்டரை வாங்க முடியாது என்று தலைமைப் பொறியாளர் கூறினார். இதனால் கோபமடைந்தஅதிமுகவினர், மேஜை மேல் இருந்த பொருட்களை எடுத்து தலைமைப் பொறியாளர் மீது வீசினர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த நாற்காலி, மேஜை மற்றும் தொலைபேசியை அடித்து நொறுக்கினர். இதனால் அலுவலக ஊழியர்கள்அலறியடித்துக் கொண்டு வெளியேறினார். பின்னர் அந்தக் கும்பல் அலுவலகத்தை விட்டு வெளியேறி தாங்கள் வந்த டாடா சுமோவில் ஏறிதப்பிவிட்டது.












Click it and Unblock the Notifications