தோட்டக்களுடன் விமானம் ஏற வந்த சுகுமாறன்
சென்னை:
தமிழக பாஜக முன்னாள் பொருளாளர் சுகுமாறன் நம்பியாரின் சூட்கேசில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல்செய்யப்பட்டது.
வில்லன் நடிகர் எம்.என். நம்பியாரின் மகனும், பாஜக முன்னாள் தேசியப் பொருளாளருமான சுகுமாறன் நம்பியார்சென்னையிலிருந்து கொச்சி செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் வழக்கமாக நடைபெறும் பாதுகாப்பு சோதனையின்போது சுகுமாறன் நம்பியாரின் பெட்டியும்சோதனையிடப்பட்டது. அப்போது வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவி அலறியதால், பெட்டி திறந்து பார்க்ப்பட்டது.
அதில் .32 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்கள் இருந்தன. இதுகுறித்து சுகுமாறனிடம் அதிகாரிகள் விளக்கம்கேட்டபோது, என்னிடம் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் உள்ளது. ஆனால் இந்தத் தோட்டாக்கள் எனது பெட்டியில்எப்படி வந்தது என்பது தெரியவில்லை என்றார்.
அவரது விளக்கத்தைக் கேட்ட அதிகாரிகள், தோட்டாக்களை பறிமுதல் செய்து கொண்டு விமானத்தில் பயணம் செய்யஅனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications