ரூ. 700 கோடியில் பாலங்கள்: கருணாநிதி அடிக்கல்
சென்னை:
சென்னை நகரில் ரூ. 700 கோடி செலவில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் சார்பில்கட்டப்படவுள்ள நான்கு புதிய அடுக்கு மேம்பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு, பாடி சந்திப்பு,மதுரவாயல் ஆகிய இடங்களில் அதி நவீன பல அடுக்கு மேம்பாலங்கள் மற்றும் நான்கு வழிச் சாலை உள்ளிச்பல்வேறு புதிய சாலைகள் ரூ. 700 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று மாதவரத்தில் நடைபெறுகிறது. கருணாநிதி அடிக்கல்நாட்டுகிறார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மத்திய டி.ஆர்.பாலு, அமைச்சர் தயாநிதி மாறன்உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதேபோல திரிசூலம் பகுதியில் 4 அடுக்கு மேம்பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 1ம் தேதிநடக்கிறது. இதிலும் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த இரு நிகழ்ச்சிகளும் மாநில அரசைச் சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications