சங்கராச்சாரியார்கள் மீது குண்டர் சட்டம் பாயாது: பிரேம்குமார்
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று எஸ்.பி. பிரேம்குமார் தெரிவித்தார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகிய 25 பேரில் இதுவரை 10 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர்.
இந் நிலையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரையும் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் போவதாகக் கூறப்பட்டு வரும்நிலையில், எஸ்.பி. பிரேம்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் என்ற வதந்தியை யாரோ பரப்பியுள்ளார்கள். இதில்உண்மை இல்லை. இந்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். சங்கராச்சாரியார்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படமாட்டார்கள் என்றார்.
சங்கர மடத்தின் வழக்கறிஞர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், சங்கராச்சாரியார்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. இதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கூறினார்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் இந்த செய்தியை மறுத்துள்ளது.