For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் கொலை: பிணம் தலைகீழாக புதைப்பு

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

Gunasundaris dead bodyதஞ்சாவூர் மாவட்டத்தில் ரயில்வே ஊழியர் ஒருவரின் மகள் கொலை செய்தவர்கள் அவரது பிணத்தை தலைகீழாகபுதைத்திருந்தனர். கால்கள் தரைக்கு மேலே நீட்டியபடி இருந்தன.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள நெய்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தஞ்சாவூர்ரயில்வேயில் பணிபுரிகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் மூத்த பெண்குணசுந்தரியை (16) கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை.

இந் நிலையில் தஞ்சாவூர் அருகே திட்டை ரயில்வே பாலத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் தண்டவாளம் அருகே ஒருகுழியில் மனித கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த நெய்தலூர் கிராம நிர்வாக அதிகாரி அன்பழகன் மெலட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீஸார் விரைந்து வந்து பிணத்தை தோண்டியெடுத்தனர். அது குணசுந்தரியின் உடல் என்பது உறுதியானது.

குணசுந்தரியின் கால்களை கயிற்றால் கட்டி, பிணத்தை தலைகீழாகப் புதைத்திருந்தனர். சுடிதார் அணிந்திருந்த அந்தப்பெண்ணின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

காதல் விவகாரம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் கருதுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X