ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் விஜயேந்திரர் அப்பீல்!
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி விஜயேந்திரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள விஜயேந்திரர் சார்பில் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை செங்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
10ம் தேதி குற்றப் பத்திரிக்கை:
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேருக்கும் வரும் 10ம் தேதி குற்றப் பத்திரிக்கைநகல் வழங்கப்படும் என்று தெரிகிறது.
சுமார் 1,700 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப் பத்திரிக்கையின் நகல் எடுக்கும் பணி தனிப்படை போலீஸ் பங்களாவில் நடந்து வருவதாகஎஸ்பி பிரேம் குமார் பேட்டியளித்தார்.
போலீஸ் டூ நீதிமன்றம்:
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குற்றப் பத்திரிக்கை நகல் எடுக்கும் பணி நீதிமன்றத்தினுடையது. இதில் போலீசார் தலையிடுவதே தவறுஎன்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த நகல் எடுக்கும் பணி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான பக்கங்களை நகல் எடுக்கும் பணியில் 10 நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications